இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2023 ஒக்டோபர் 14 ஆம் திகதி மாலை மன்னார் கடற்பரப்பில் மற்றும் யாழ்ப்பாணம், நெடுந்தீவு, கச்சதீவு கடற்பரப்புகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து (05) இந்திய மீன்பிடி படகுகளுடன் 27 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பை அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படை இலங்கை கடற்பரப்பில் ரோந்து பணிகளை அதிகரித்து தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி, இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பல இந்திய மீன்பிடி படகுகளைக் கண்காணித்த வட மத்திய மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளின் கடற்படையினர் 2023 ஒக்டோபர் 14 ஆம் திகதி குறித்த கடற்படை கட்டளையின் விரைவுத் தாக்குதல் படகுகள், கடலோர ரோந்து படகுகள் மற்றும் சிறிய படகுகள் மூலம் இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டும் சிறப்பு நடவடிக்கையொன்றை மேற்கொன்டுள்ளனர். அப்போது மன்னார் பகுதிக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் 15 இந்திய மீனவர்களும் யாழ்ப்பாணம், நெடுந்தீவு, கச்சதீவு பகுதிகளுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூன்று (03) இந்திய மீன்பிடி படகுகளுடன் 12 இந்திய மீனவர்களும் இவ்வாரு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் இந்திய மீனவர்கள் 27 நபர்கள் தலைமன்னார் ஜெட்டி மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மேலும், இந்த நடவடிக்கையுடன் 2023 ஆம் ஆண்டில் இதுவரை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் 22 இந்திய மீன்பிடி படகுகளும் 137 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.