சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து கொண்டு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 02 கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் 05 சந்தேகநபர்கள் மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2023 நவம்பர் 03 ஆம் திகதி மாலை மன்னார், ஒழுதுடுவாய் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு (02) கிலோ நூற்று ஐம்பது (150) கிராம் தங்கத்துடன் 05 சந்தேகநபர்கள், டிங்கி படகொன்று (01), முச்சக்கர வண்டியொன்று (01) மற்றும் மோட்டார் சைக்கிளொன்று (01) கைது செய்யப்பட்டுள்ளது.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிருவனத்தின் கடற்படையினர் 2023 நவம்பர் மாதம் 03 ஆம் திகதி மாலை மேற்கொண்டுள்ள இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மன்னார், ஒழுதுடுவாய் கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று அவதானித்து ஆய்வு செய்யப்பட்டது. அங்கு ஐந்து (05) சந்தேக நபர்களுடன் குறித்த டிங்கி படகு (01) மற்றும் இலங்கையில் இருந்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு (02) கிலோ நூற்று ஐம்பது (150) கிராம் தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும், ஒலுதுடுவாய் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனையின் போது, இந்தக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டியொன்று (01) மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 மற்றும் 56 வயதுக்குட்பட்ட வங்காலே மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் அந்த ஐந்து (05) சந்தேக நபர்கள், இரண்டு (02) கிலோ நூற்று ஐம்பது (150) கிராம் தங்கம், முச்சக்கர வண்டி (01) மற்றும் மோட்டார் சைக்கிள் (01) ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை சுங்க அனுமதி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.