நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து கொண்டு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 02 கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் 05 சந்தேகநபர்கள் மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2023 நவம்பர் 03 ஆம் திகதி மாலை மன்னார், ஒழுதுடுவாய் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு (02) கிலோ நூற்று ஐம்பது (150) கிராம் தங்கத்துடன் 05 சந்தேகநபர்கள், டிங்கி படகொன்று (01), முச்சக்கர வண்டியொன்று (01) மற்றும் மோட்டார் சைக்கிளொன்று (01) கைது செய்யப்பட்டுள்ளது.

04 Nov 2023

காலி தொடம்கொட மற்றும் வக்வெல்ல பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது

காலி, பத்தேகமவில், கிங் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொடம்கொட மற்றும் வக்வெல்ல பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் 2023 நவம்பர் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

04 Nov 2023