54 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 03 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் எழுவத்தீவிற்கு அப்பால் கடற்பகுதியில் 2023 நவம்பர் மாதம் 06 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது நூற்று முப்பத்தேழு (137) கிலோகிராமுக்கு அதிகமான கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் மூவர் (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 நவம்பர் மாதம் 06 ஆம் திகதி இரவு வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்திக்கு சொந்தமான கரையோர ரோந்து படகுகள் மற்றும் சிறிய படகுகள் பயன்படுத்தி எழுவத்தீவு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்பகுதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று கண்காணித்து ஆய்வு செய்யப்பட்டதுடன் அங்கு, 03 மூடைகளில் 56 பொதிகளாக இருந்த நூற்று முப்பத்தேழு (137) கிலோ (45) கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா பொதிகளுடன் கப்பலில் இருந்த 03 சந்தேக நபர்கள் மற்றும் குறித்த டிங்கி படகு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி ஐம்பத்து நான்கு (54) மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என நம்பப்படுகிறது.

மேலும், கேரள கஞ்சாவுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 முதல் 44 வயதுக்கு இடைப்பட்ட புனரின் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேகநபர்கள் மூவர், சுமார் (03) நூற்று முப்பத்தேழு (137) கிலோ நாற்பத்தைந்து (45) கிராம் (ஈரமான) எடையுள்ள) கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு (01) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.