சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயன்ற போதை மாத்திரைகளுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டி கடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2023 நவம்பர் 09,) கல்பிட்டி இரமதீவு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயற்சித்த 570,000 Pregabalin போதை மாத்திரைகள் அடங்கிய டிங்கி படகு ஒன்றுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் சிறிய படகொன்று மூலம் இரமதீவு கடற்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டதுடன், குறித்த கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று அவதானித்து பரிசோதிக்கப்பட்டது. அங்கு, இரண்டு சந்தேக நபர்களும் (02) டிங்கி படகும் (01) அந்த டிங்கி படகில் சட்டவிரோதமாக பத்து (10) பொதிகளில் கொண்டு வரப்பட்ட ஐந்து இலட்சத்து எழுபதாயிரம் (570,000) Pregabalin மாத்திரைகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33 மற்றும் 39 வயதுடைய நொரோச்சோலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் (02) மற்றும் போதை மாத்திரைகளின் தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.