கல்முனை கார்த்தீவ் கடற்கரையில் கரை ஒதுங்கிய சுறா மீனை கடற்படையினரின் உதவியுடன் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டது

கல்முனை கார்த்தீவ் கடற்கரையில் சிக்கித் தவித்த சுறாவை (01) பத்திரமாக மீண்டும் ஆழ்கடலில் விடுவிக்க இலங்கை கடற்படையினர் 2023 டிசம்பர் 05 ஆம் திகதி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கல்முனை கார்த்தீவ் கடற்கரையில் சுறா மீன்னொன்று கரை ஒதுங்கியுள்ளதாக தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் திகாயு நிருவனத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் கடற்படையினர் உடனடியாக கார்த்தீவ் கரையோர கண்காணிப்பு மையத்தின் கடற்படையினர் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களின் உதவியுடன் சுறா மீனை ஆழ்கடலுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கை எடுத்துள்ளனர்