கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவை

சேவா வனிதா பிரிவின் மேலும் ஒரு சமூக சேவையாக, சேவா வனிதா பிரிவின் தளபதியான திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்துப்படி, 2020 நவம்பர் 25 ஆம் திகதி கடற்படையில் பணியாற்றும் எச்.எம்.பி குணவர்தனவின் இ.டி 106471 நோய்வாய்ப்பட்ட சகோதரிக்கு மின்சார சக்கர நாற்காலியொன்றை நன்கொடையாக வழங்கப்பட்டது. இந் நிகழ்வு 2020 நவம்பர் 25 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

கடற்படை வீர்ர் எச்.எம்.பி குணவர்தன இ.டி 106471 இன் வேண்டுகோளின் பேரில், கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்ன, கடற்படை சேவா வனிதா பிரிவின் நிதி உதவியுடன் இந்த மின்சார சக்கர நாற்காலியை குறித்த கடற்படை வீர்ரின் நோய்வாய்ப்பட்ட சகோதரிக்கு வழங்கினார்.

COVID - 19 தொற்றுநோய்க்கான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வுக்காக சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர் திருமதி குமாரி வீரசிங்க மற்றும் சேவா வனிதா பிரிவின் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.