இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்ட சேவா வனிதா அபான்ஸ் நிலையம் திறக்கப்பட்டது

இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்ட இலங்கை கடற்படை சேவா வனிதா அபான்ஸ் நிலையம் 2021 ஜனவரி 09 அன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பங்களிப்புடன் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன திறந்து வைத்தார்.

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் மாலுமிகளின் நலனுக்காக சேவா வனிதா பிரிவினால் பராமரிக்கப்படவுள்ள புதிதாக கட்டப்பட்ட அபான்ஸ் நிலையத்தின் திறப்பு விழாவுக்காக தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி, சேவா வனிதா திட்டத்தின் மூத்த மேற்பார்வை அதிகாரிகள் மற்றும் அபான்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு குழு கலந்து கொண்டனர்.

மேலும், கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்தில் உள்ள சேவா வனிதா நலன்புரி விற்பனை நிலையம் மற்றும் சேவா வனிதா யோகட் திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அந்தந்த திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு தேவையான வழிமுறைகளை வழங்கினார்.

தற்போதுள்ள COVD19 ஆபத்து நிலைமையைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் துறை வழங்கிய அறிவுறுத்தல்களின்படி இந்த திட்டங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன.