சேவா வனிதா பிரிவின் மூத்த உறுப்பினர்களுடைய பிரியாவிடை வைபவம்

கடற்படை சேவா வனிதா பிரிவின் 05 மூத்த உறுப்பினர்களுக்கான பிரியாவிடை விருந்து இன்று (2020 ஜனவரி 11) கடற்படை தலைமையகத்தில் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் நடைபெற்றது.

கடற்படை இசைக்குழு மற்றும் கடற்படை கலாச்சார நடனக் குழுவினரின் பாடல் மற்றும் நடனம் மூலம் பிரியாவிடை விருந்து வண்ணமயமானது. கடற்படை சேவா வனிதா பிரிவில் இருந்து வெளிச்செல்லும் மூத்த உறுப்பினர்களான திருமதி யசிந்தா விஜேசேகர, திருமதி. ஜனகி திஸ்ஸாநாயக்க, திருமதி மன்ஜுலா மலவிஆரச்சி, திருமதி சாந்தி விஜேதுங்க மற்றும் திருமதி சமிலா தில்ருக்‌ஷி பெரேரா ஆகியோருக்கு கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியால் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

நாட்டில் தற்போதுள்ள சுகாதார மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்ட இந்த பிரியாவிடை விருந்தில் பெண் அதிகாரிகள் உட்பட சேவா வனிதா பிரிவின் மூத்த மற்றும் இளைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.