கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், கடற்படை உறுப்பினர்களின் நலனுக்காக சேவா வனிதா பிரிவு மூலம் இலங்கை கடற்படை கப்பல் பரண நிறுவனத்தில் புதிய தோற்றத்துடன் நிறுவிய நலன்புரி நிலையத்தை மற்றும் இலங்கை கடற்படை கப்பல் தம்பப்பன்னி நிருவன வளாகத்தில் நிறுவிய நலன்புரி நிலையம் மற்றும் அபான்ஸ் நிலையம் 2021 ஏப்ரல் 08 ஆம் திகதி கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியால் திறந்துவைக்கப்பட்டன.