கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி ஊனமுற்ற கடற்படை போர்வீரர்களின் நல்வாழ்வு குறித்து விசாரித்தார்

ශஇலங்கை கடற்படையில் பணியாற்றும் போது ஊனமுற்ற போர்வீரர்களுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் கட்டப்பட்ட ‘Anchorage Naval Care Center’ இல் இருக்கும் ஊனமுற்ற போர்வீரர்களின் நல்வாழ்வு குறித்து விசாரிக்க 2021 ஏப்ரல் 23 ஆம் திகதி கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன விஜயமொன்று மேற்கொண்டுள்ளார்.

இந் நிகழ்வுக்காக துணைப் தலைமை அதிகாரி மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன, சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர் திருமதி அயோனி வேவிட, கொடி அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள், சேவா வனிதா பிரிவு உறுப்பினர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.