முல்லேரியாவ கிழக்கு கொழும்பு அடிப்படை வைத்தியசாலைக்கு கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நன்கொடையாக படுக்கைகள் வழங்கப்பட்டது

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியின் கருத்துப்படி, சேவா வனிதா பிரிவின் நிதியால் முல்லேரியாவ கிழக்கு கொழும்பு அடிப்படை வைத்தியசாலையின் சிறப்பு மகப்பேறு பிரிவில் கோவிட் -19 நோய்த்தொற்றுடைய தாய்மார்களுக்கு சிகிச்சையளிப்பதுக்காக HDU/ICU (High Dependency Unit / Intensive Care Unit) வகையில் 03 படுக்கைகள், இன்று (12 மே 2021) கிழக்கு கொழும்பு அடிப்படை வைத்தியசாலையின் இயக்குநர் டாக்டர் பிரியந்த கருணாரத்னவுக்கு, சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்னவினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, சேவா வனிதா பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி அயோனி வேவிட, சேவா வனிதா பிரிவின் சிரேஷ்ட மேற்பார்வை அலுவலர் கமடோர் யு.எஸ். செனவிரத்ன இயக்குநர் கொமடோர் பல் சேவைகள் மருத்துவ கமடோர் ஆர்.பி.என்.என் விஜெதோரு, கட்டளை மருத்துவ அதிகாரி (மே) மருத்துவ கொமாண்டர் எம்.வி.எஸ். அதுகோரல மற்றும் சேவா வனிதா பிரிவின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.