தற்போதுள்ள கொவிட் 19 தொற்றுநோய் காரணத்தினால் நன்கொடையாளர்களுக்கு இரத்த தானம் செய்வது கடினமானது. இக் காரணத்தினால் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளிலும், தேசிய இரத்த வங்கியிலும் உள்ள இரத்த இருப்புகள் குறைந்துவிட்டன. இதன் விளைவாக, இரத்த வங்கி மற்றும் அபேக்ஷா வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் இருந்து இரத்த தானம் செய்யுமாரு கோரிக்கைகள் வந்துள்ளது.