மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நன்கொடையாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் குழந்தைகள் மற்றும் பிற நோயாளிகளின் நலனுக்காக சுகாதார பொருட்கள், மின் உபகரணங்கள் மற்றும் Medical Oxygen Cylinder நன்கொடையாக வழங்களும் நிகழ்வு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்ன தலைமையில் இன்று (2021 மே 25) அபேக்ஷா வைத்தியசாலை வழாகத்தில் நடைபெற்றது.

25 May 2021

ஜினானந்த குழந்தைகள் மேம்பாட்டு மையத்திற்கு கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நன்கொடையாக உலர் உணவுகள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சந்திமா உலுகேதென்னவின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் இன்று (2021மே 25) ஸ்ரீ சுகத விஹாரயவில் உள்ள ஸ்ரீ ஜினானந்த குழந்தைகள் மேம்பாட்டு மையத்தில் வசிக்கும் தேரர்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கும் நிகழ்வொன்று ஸ்ரீ சுகத விஹார வளாகத்தில் நடைபெற்றது.

25 May 2021

காப்பகங்கள்