நிகழ்வு-செய்தி

இந்திய கடற்படையின் ‘INS Gharial’ கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

இந்திய கடற்படைக்கு சொந்தமான Landing Ship Tank வகையின் ‘INS Gharial’ கப்பல் இன்று (2022 ஏப்ரல் 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் குறித்த கப்பலை வரவேற்கப்பட்டது.

29 Apr 2022

வட மத்திய கடற்படை கட்டளையில் இடம்பெற்ற இரத்த தானம் நிகழ்ச்சி

இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு இரத்த தானம் நிகழ்வு 2022 ஏப்ரல் 28 ஆம் திகதி கட்டளை வைத்தியசாலை வளாகத்தில் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

29 Apr 2022

‘வழங்கள் கருத்தரங்கு - 2022’ மற்றும் 06வது நீண்ட வழங்கள் முகாமைத்துவ பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

‘வழங்கள் கருத்தரங்கு - 2022’ மற்றும் 06வது நீண்ட வழங்கள் முகாமைத்துவ பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா 2022 ஏப்ரல் 23 ஆம் திகதி கடற்படை பணிப்பாளர் நாயகம் வழங்கல் ரியர் அட்மிரல் நிஷாந்த டி சில்வாவின் தலைமையில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் பீடத்தின் உள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

24 Apr 2022

244 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 291 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தொண்டர் கடற்படையின் 244 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 291 கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2022 ஏப்ரல் 22 ஆம் திகதி காலி பூஸ்ஸவிலுள்ள இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்தின் தலைமை பயிற்சி மைதானத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

23 Apr 2022

இலங்கை கடற்படை சங்க செயலகத்தின் முதல் மாடி திறந்து வைக்கப்பட்டுள்ளது

வெலிசர கடற்படை வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை சங்க செயலக கட்டிடத்தின் முதல் மாடி கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை சங்கத்தின் புரவலர் வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இன்று (07 ஏப்ரல் 2022) திறந்து வைக்கப்பட்டது.

07 Apr 2022

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த கடற்படைக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளது

2020 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த கடற்படை வீரர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று (2022 ஏப்ரல் 06) கடற்படைத் தலைமையகத்திலுள்ள அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க கேட்போர் கூடத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இடம்பெற்றது.

06 Apr 2022

2021 கடற்படை பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படை ஆய்வுப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்படை பேச்சுப் போட்டித்தொடரின் - 2021 (Public Speaking Competition - 2021) இறுதிப் போட்டியில் சிறந்து விளங்கிய கடற்படை வீரர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு கடற்படைத் துனை தளபதி ரியர் அட்மிரல் வை என் ஜயரத்ன தலைமையில் இன்று (2022 ஏப்ரல் 05) கடற்படைத் தலைமையகத்தில் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

05 Apr 2022

பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் ‘PROTTASHA’ திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது

பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தமான ‘Corvette’ வகையின் போர் கப்பலான ‘BNS PROTTASHA’ இன்று (2022 ஏப்ரல் 2) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க வருகை தந்த கப்பலை வரவேற்றனர்.

02 Apr 2022