Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

கடற்படையால் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது மெதிரிகிரியவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது

14 Jun 2026

கடற்படையின் சமூக சேவைத் திட்டத்தின் கீழ்,பொலனறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பொலனறுவை திக்கல்புர தொடக்கப்பள்ளியில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2026 ஜூன் 10 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.

கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ உதவியுடனும், கம்மெத்த சமூக நலத் திட்டத்தின் நிதி ஆதரவுடனும் நிறுவப்பட்ட இந்த (01) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன், கடற்படை இதுவரை 1156 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளது.

அதன்படி, இவ்வாறு பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம், பொலனறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பொலனறுவை திக்கல்புர தொடக்கப்பள்ளியில் பயிலும் பாடசாலை மாணவர்கள் உட்பட, அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்களின் சுத்தமான குடிநீர் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும்.

Accessibility Tools