சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதி நீர்கொழும்பில் வைத்து கைது
இலங்கை கடற்படையினரால் இன்று (2026 ஜூலை 20) நீர்கொழும்பு, குடாபாடுவை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கொண்டுசெல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பீடி இலைத் தொகுதியுடன் டிரக்டர் வண்டியொன்றும் (01) கைப்பற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேற்கு கடற்படை கட்டளைக்குக்குச் சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் களனி நிறுவனத்திற்கு கிடைத்த நம்பிக்கையான தகவலுக்கு அமைய, நீர்கொழும்பு குடாபாடுவை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்குரிய டிரக்டர் வண்டியொன்றும் (01) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு விற்பனைக்னாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த, 1,456 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதியுடன் குறித்த டிரக்டர் வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டது.
மேலும், இந்நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட டிரக்டர் வண்டி மற்றும் பீடி இலைத் தொகுதி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.













