இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும் கடற்படைத் தளபதிக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கெளரவ திரு. Jean - Francois PACTET அவர்கள் இன்று (2023 பிப்ரவரி 06) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது கடற்படைத் தளபதி மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஆகியோருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் இந்நிகழ்வுக்காக இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தின் கடல்சார் பாதுகாப்பு ஆலோசகர் Commander Jean – Baptiste TROUCHE மற்றும் கடற்படைத் தளபதியின் உதவியாளர் கொமடோர் கோசல வர்ணகுலசூரிய ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதி பிரான்ஸ் தூதுவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.