நிகழ்வு-செய்தி
ரியர் அட்மிரால் டி விஜேதுங்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
ஏறக்குறைய 34 ஆண்டுகால தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் டி விஜேதுங்க இன்று (2020 டிசம்பர் 31) ஓய்வு பெற்றார்.
31 Dec 2020
கடற்படைத் தளபதி வட மத்திய கடற்படை கட்டளைக்கு விஜயம்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன 2020 டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் வட மத்திய கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்து கட்டளையின் செயல்பாட்டுத் தயார்நிலை, அதன் நிர்வாக செயல்பாடு மற்றும் நலன்புரி வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
28 Dec 2020
கடற்படையால் ருவன்வெலிசேய வளாகத்தில் கட்டப்பட்ட 800வது நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக ருவன்வெலிசேய வளாகத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ளது.
26 Dec 2020
காலமான மிகவும் வணக்கத்திற்குரிய டென்மார்க்கில் ஞானதீப தேரரின் அஸ்தி வைக்கப்பட்ட தாது கோபுரம் புத்த பக்தர்களின் வழிபாட்டிற்காக பூஜை செய்யப்பட்டது
காலமான மிகவும் வணக்கத்திற்குரிய டென்மார்க்கில் ஞானதீப தேரரின் அஸ்தி வைத்து மீகலேவ எத்தலகல ஆரண்ய சேனாசனத்தில் கடற்படையினரால் கட்டப்பட்ட தாது கோபுரம் இன்று (2020 டிசம்பர் 26) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் புத்த பக்தர்களின் வழிபாட்டிற்காக பூஜை செய்யப்பட்டது.
26 Dec 2020
கடற்படை தளபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் நத்தார் பண்டிகை, அமைதியான மற்றும் மகிழ்ச்சியான பண்டிகையாக வேண்டும் என்று அனைத்து கிறிஸ்தவர்களுக்கும், கடற்படைப் பணியாளர்களுக்கும், சிவில் ஊழியர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
25 Dec 2020
இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு களனி ரஜமஹா விஹாராயத்தில் ‘தாது மந்திர பூஜை’
இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவுக்கு இனையாக மேற்கொள்ளப்படுகின்ற மத நிகழ்ச்சிகளின் மற்றொரு நிகழ்ச்சி 2020 டிசம்பர் 24 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமையில் களனி ரஜமஹா விஹாராயத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு நிகழ்வுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கழந்து கொண்டார்.
25 Dec 2020
70 மூத்த கடற்படை வீரர்களுக்கு மற்றும் 30 இளைய கடற்படை வீரர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
இலங்கை கடற்படையில் பணி யாற்றும் 70 மூத்த கடற்படை வீரர்களுக்கு ரூபா 500,000,00 மற்றும் 30 இளைய கடற்படை வீரர்களுக்கு ரூபா 200,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2020 டிசம்பர் 24) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
24 Dec 2020
இலங்கை கடற்படையின் முதல் மறைந்திருந்து துப்பாக்கி சுடும் போட்டி திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை கடற்படையால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட மறைந்திருந்து துப்பாக்கி சுடும் போட்டி (Naval Sniper Firing Competition) 2020 டிசம்பர் 14 அன்று முதல் திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் நடைபெற்றதுடன் பரிசு வழங்கும் விழா கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவான் பெரேரா தலைமையில் 2020 டிசம்பர் 20 அன்று இடம்பெற்றது.
23 Dec 2020
N95 முகமூடிகளை கிருமிநாசினி செய்யும் இயந்திரமொன்று கராபிட்டி போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டது
இலங்கை கடற்படையின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்பட்ட N95 முகமூடிகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான கிருமிநாசினி இயந்திரத்தை, காலி, கராபிட்டி போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வழங்கும் நிகழ்வு 2020 டிசம்பர் 16 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் இடம்பெற்றது.
19 Dec 2020
கடற்படையால் கட்டப்பட்ட மற்றொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது
சிறுநீரக நோயை நாட்டிலிருந்து அகற்றுவதற்கான தேசிய முயற்சில் இலங்கை கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் படி இந்த சமூக பொறுப்புணர்வு முயற்சியின் மற்றொரு திட்டமாக, அம்பாரை ஹுலன்னுகே பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 787 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் 2020 டிசம்பர் 16 ஆம் திகதி பொது மக்களின் பயன்பாட்டிற்காக கடற்படையால் திறந்து வைக்கப்பட்டது.
19 Dec 2020