தீகவாபி தூபின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நிதி சேர்க்கும் விழா இன்று (2021 பிப்ரவரி 12) கொழும்பு 07, சம்போதி விஹாரயவில் அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவின் போது, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தீகவாபி தூபின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக 05 மில்லியன் ரூபா அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நன்கொடையாக வழங்கினார்.