நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (2021 ஏப்ரல் 30) வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

30 Apr 2021

காலி கலந்துரையாடல் 2021 அதிகாரப்பூர்வ வலைத்தளம் வெளியிடப்பட்டது

2021 காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று (2021 ஏப்ரல் 30) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் வெளியிடப்பட்டது.

30 Apr 2021

ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகே தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகே இன்று (2021 ஏப்ரல் 27) தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

27 Apr 2021

செயலிழந்த படகு பாலம் கடற்படையின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டது

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் குரிகட்டுவான் படகுத்துறையில் இருந்து நயனதீவுக்கு பொருட்கள் மற்றும் பயணிகளை கொண்டு செல்ல சாலை மேம்பாட்டு ஆணையத்தால் பயன்படுத்தப்பட்ட படகு பாலம் (Ferry) பல மாதங்களாக செயலற்ற நிலையில் இருந்ததுடன் சமீபத்தில் கடற்படையின் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டது.

27 Apr 2021

கடற்படை வீரர்களின் நலனுக்காக பல்நோக்கு செயல்பாட்டு மண்டபமொன்று கட்டப்படுகின்றது

அனைத்து கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் அதிநவீன பல்நோக்கு செயல்பாட்டு மண்டபமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டுதல் இன்று (2021 ஏப்ரல் 25) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் வெலிசர கடற்படை வளாகத்தில் நடைபெற்றது.

25 Apr 2021

‘Galaxy Cup’ 25 வயதுக்குட்பட்ட சூப்பர் லீக் மகளிர் கைப்பந்து கிண்ணம் – 2021 கடற்படை பெற்றுள்ளது

ශஇலங்கை கைப்பந்து கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Galaxy Cup’ 25 வயதுக்குட்பட்ட சூப்பர் லீக் கைப்பந்து சாம்பியன்ஷிப் - 2021 போட்டித் தொடரில் இன்று (ஏப்ரல் 24, 2021) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய கடற்படை பெண்கள் அணி ஹைட்ரமணி விளையாட்டுக் கழக மகளிர் அணியை தோற்கடித்து கிண்ணத்தை வென்றது. மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் கவுன்சிலின் உள்ளரங்க அரங்கத்தில் நடைபெற்ற இந்த பெண்கள் இறுதி போட்டியில் பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கலந்து கொண்டார்.

24 Apr 2021

ஓய்வுபெற்ற கடற்படை வீரர்களின் இறுதி சடங்குகளுக்காக நிதி உதவி

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வப் கடற்படையின் பணியாற்றி ஓய்வுபெற்ற கடற்படை வீரர்களுக்கு வழங்கப்படும் நலன்புரி வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் ஓய்வுபெற்ற கடற்படை வீரர்களின் இறுதி சடங்குகளுக்காக அவர்களின் உறவினர்களுக்கு ரூ .100,000 வழங்க கடற்படை திட்டமிட்டுள்ளது.

24 Apr 2021

ஹம்பாந்தோட்டை கரகம் லேவாயவுக்கு வான்வழி படகொள்றை (Air propelled boat) ஈடுபடுத்தப்பட்டது.

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக வழாகத்தில் அமைந்துள்ள எரிவாயு மற்றும் எண்ணெய் சேமிப்பகங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன், இலங்கை கடற்படை 2021 ஏப்ரல் 18 அன்று முதல் ஹம்பாந்தோட்டை கரகம் லேவாயவின் ஆழமற்ற நீரில் ஓடக்கூடிய ஒரு வான்வழி படகு செயல்படுத்தியது.

23 Apr 2021

கடற்படையால் தயாரிக்கப்பட்ட 350 தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்கள் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டன

கடற்படை சமூக சேவை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்கள் உற்பத்தி திட்டத்தால் தயாரிக்கப்பட்ட 350 தலசீமியா உட்செலுத்துதல் இயந்திரங்களை இன்று (2021 ஏப்ரல் 21) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

21 Apr 2021

நாட்டின் குறைந்த வசதிகள் கொண்ட 08 பாடசாலைகள் இலங்கை கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுகிறது

இலங்கை கடற்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகளை 2021 ஆம் ஆண்டில் அபிவிருத்தி செய்து நாட்டின் உயிர்நாடியாக இருக்கும் குழந்தைகளின் கல்விக்கு மிகவும் உகந்த சூழலையாக உருவாக்கும் கடற்படை சமூக சேவை திட்டம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு, கிழக்கு, வட மத்திய, வட மேற்கு, தென்கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய கடற்படை கட்டளைகளில் 2021 ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கப்பட்டது. இந்த சமூக சேவை திட்டத்திற்கான நிதி பங்களிப்பு அனைத்து கடற்படை அதிகாரிகளும் மாலுமிகளும் தங்கள் மாத சம்பளத்தை தானாக முன்வந்து வழங்குகிறார்கள், மேலும் இந்த கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மனிதவளத்தையும் கடற்படை வழங்குகிறது.

20 Apr 2021