கொவிட் 19 அபாயத்தை தடுப்பதற்கான அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தும் நோக்கில் கோவிட் 19 அச்சுறுத்தலை எதிர்கொண்டு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு இன்று (2021 மே 11) “சினோபார்ம்” (Sinopharm) தடுப்பூசியை கம்பஹ மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மருத்துவ அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கடற்படை வழங்கியது.