2021 மே மாதம் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுக கடல் பகுதியில் தீ விபத்துக்குள்ளான MV X-PRESS PEARL என்ற கப்பலில் பேரழிவு நிலைமையை நிர்வகிக்க மற்ற பங்குதாரர்களுடன் இணைந்து செய்த சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இன்று (ஜூன் 10, 2021)கொழும்பு துறைமுகத்தில் வைத்து இந்திய கடலோர காவல்படையின் ‘சமுத்ர பிரஹாரி’(ICGS Samudra Prahari ), 'வஜ்ரா' (ICGS Vajra) மற்றும் 'வெபாவு' (ICGS Vaibhav) ஆகிய கப்பல்களின் கட்டளை அதிகாரிகளுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பாராட்டு கடிதங்களை வழங்கினார்.