அமெரிக்காவின் ரோட் தீவு பிராந்தியத்தில் நியூபோர்ட் நகரத்தில் உள்ள அமெரிக்க கடற்படை போர் கல்லூரியில், 2021 செப்டம்பர் 14 முதல் 17 வரை நடைபெற்ற அமெரிக்க கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச கடல்சார் ஆதிக்கம் மாநாட்டில் (International Seapower Symposium) 24 வது அமர்வுக்காக இலங்கை கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கலந்து கொண்டார்.