மரைன் படைப் பிரிவுடன் இனைந்து வெற்றிகரமாக பயிற்சியை நிரைவு செய்த 07 வது ஆட்சேர்ப்பின் 04 அதிகாரிகள் மற்றும் 22 மாலுமிகளுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் 2022 மார்ச் 04 ஆம் திகதி சின்னங்கள் அணிவிக்கப்பட்டது. கடற்படைத் தளபதியின் தலைமையில் திருகோணமலை, சாம்பூரில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவனத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கலந்துகொண்டார்.