இலங்கை நிரந்தர மற்றும் தொண்டர் கடற்படையின் 244 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 291 கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2022 ஏப்ரல் 22 ஆம் திகதி காலி பூஸ்ஸவிலுள்ள இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்தின் தலைமை பயிற்சி மைதானத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.