இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அரந்தலாவ சர்வதேச பௌத்த நிலையத்தில் மற்றும் கலேவெல, இஹல திக்கல ஆரம்பக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2022 ஜூன் 02 ஆம் திகதி மற்றும் இன்று (2022 ஜூன் 03) பாடசாலை மாணவர்களின் மற்றும் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.