இலங்கை கடற்படை வரலாற்றில் முதல் தடவையாக அடிப்படை சுழியோடிகளுக்கான பயிற்சிநெறியை வெற்றிகரமாக முடித்த மூன்று (03) பெண் பணியாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 2022 செப்டெம்பர் 24 ஆம் திகதி கடற்படை கப்பல்துறையில் தளபதி கொமடோர் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் உள்ள கடற்படையின் சுழியோடுதல் பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது.