திருகோணமலை புல்முடை ஜின்னபுரம் கடற்பரப்பில் 2022 ஒக்டோபர் 26 ஆம் திகதி வெடிமருந்துகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மூன்று (03) சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டை கைவிடுவதற்கு கடற்படையினருக்கு பணம் கொடுக்க வந்த இருவரை (02) கைது செய்த கடற்படை வீரர்களின் சேவையைப் பாராட்டி, இன்று (2022 ஒக்டோபர் 28,) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படைத் தலைமையகத்தில் பாராட்டுக் கடிதங்களை வழங்கினார்.