பிரித்தானிய அரச கடற்படைக்கு சொந்தமான ‘HMS TAMAR’ என்ற கப்பல் 2023 ஜனவரி 27 ஆம் திகதி பழுதுபார்க்கும் பணிக்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் அதன் கட்டளை அதிகாரி கமாண்டர் டீலோ எலியட் - ஸ்மித் (Commander Teilo Elliot – Smith) மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் த சில்வா இடையே சந்திப்பொன்று 2023 ஜனவரி 28 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது.