'உலக குளுக்கோமா தினத்தை' முன்னிட்டு தெற்கு கடற்படை கட்டளை மருத்துவமனை மூலம் கண் மருத்துவ திட்டமொன்று நடத்தப்பட்டது.

மார்ச் 12 ஆம் திகதி ஈடுபட்டுள்ள 'உலக குளுக்கோமா தினத்தை' முன்னிட்டு, தெற்கு கடற்படை கட்டளை மருத்துவமனை, கராப்பிட்டிய கண் மருத்துவப் பாடசாலையுடன் இணைந்து, கடற்படை வீரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்காக 2023 மார்ச் 17 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளை மருத்துவமனையில் கிளௌகோமா கண் மருத்துவ திட்டமொன்று நடத்தியது.

இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டலில் தென் கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவின் மேற்பார்வையில், கராப்பிட்டி கண் மருத்துவக் கல்லூரியின் விசேட வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் அனுசரணையில், இந்த குளுக்கோமா கண் மருத்துவ திட்டம் இடம்பெற்றதுடன் இதன் மூலம் கடற்படை வீரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 218 சிவில் ஊழியர்கள் பரிசோதிக்கப்பட்டு நிபுணர் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேலும், இந் நிகழ்வுக்காக தென் கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் ஜயந்த பண்டார, தென் கடற்படை கட்டளை மருத்துவ அதிகாரி கமாண்டர் எஸ்.பி.எஸ்.ஜெயசுமண உட்பட தென் கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் இளைய கடற்படையினர், கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். .