2023 ஆம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக, விவசாய அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'நெகதட பெலயக் - தேசிய மரநடுகை நிகழ்ச்சித் திட்டத்துடன்' இணைந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இன்று (2023 ஏப்ரல் 20) காலை 06.38 மணியளவில் கடற்படைத் தலைமையக வளாகத்தில் மா மரக்கன்று ஒன்றை நட்டார்.