மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 ஜூன் 18 ஆம் திகதி இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் ‘PNS TIPPU SULTAN’ வெற்றிகரமாக தமது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை கடற்படை கப்பல் கஜபாகுவுடன் நடத்தப்பட்ட கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் இன்று (2023 ஜூன் 04) தீவை விட்டு வெளியேறியது. இதேவேளை, குறித்த கப்பலுக்கு கடற்படையினரின் பாரம்பரிய பிரியாவிடை நிகழ்வு கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.