கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2023 ஜூலை 01 ஆம் திகதி கிழக்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட திருகோணமலை தெற்குப் பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு குறித்த பகுதியில் கடற்படை மற்றும் இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்தின் செயற்பாடுகள் மற்றும் நலன்புரி வசதிகளை அவதானித்தார். மேலும் கடற்படையின் செயல்பாட்டுத் தயார்நிலை, கால அவகாசம் மற்றும் சவால் முகாமைத்துவம் பற்றி குறித்து திருகோணமலை தெற்கு பிராந்திய அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு விளக்கமளித்தார்.