மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு 2023 ஜூலை 29 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த இந்திய கடற்படையின் ‘INS Khanjar’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இலங்கை கடற்படை கப்பல் சாகரவுடன் நடத்திய கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் இன்று (2023 ஜூலை 31) நாட்டை விட்டு புறப்பட்டது. இதனிடையே திருகோணமலை துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.