உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 செப்டம்பர் 1 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த இந்திய கடற்படை கப்பல் ‘INS Delhi’ வெற்றிகரமாக தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து, இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகுவுடன் நடத்திய கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் இன்று (2023 செப்டம்பர் 03) தீவை விட்டு வெளியேறியது. இந்நிலையில், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.