கடற்படை விரைவு நடவடிக்கை படகுகள் படைப்பிரிவின் இருபத்தி ஏழாவது (27) தகுதிப் பாடநெறியை நிறைவு செய்த இரண்டு (02) அதிகாரிகள் மற்றும் முப்பத்து நான்கு (34) மாலுமிகளுக்கு சின்னங்கள் வழங்கும் நிகழ்வு புத்தளம், கங்கேவாடிய விரைவு நடவடிக்கை படகுகள் படைத் தலைமையகத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் இன்று (15 நவம்பர் 2023) வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் அவர்களின் அழைப்பின் பேரில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் பெருமையுடன் நடைபெற்றது.