IORA தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, 'எதிர்கால தலைமுறைகளுக்கான நிலையான இந்தியப் பெருங்கடல்' (Sustainable Indian Ocean for Future Generations) என்ற தொனிப்பொருளின் கீழ், காலி முகத்துவாரத்தில் கடல் தொடர்பான நடவடிக்கைகள் உள்ளிட்ட கண்காட்சியொன்று இன்று (2024 மார்ச் 10) ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை ஜனாதிபதி மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்துகொண்டார்.