நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படை கப்பல் தக்ஷின நிருவனத்தின் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது
கடற்படை சேவா வனிதா பிரிவின் நிதியுதவி மற்றும் வைத்தியசாலை சேவை சங்கத்தின் தலைவர் ராஜகீய பண்டித பூஜ்ய ராஜ்வெல்லே சுபூதி தேரரால் நன்கொடையாக வழங்கப்பட்ட வைத்தியசாலை உபகரணங்களினால் இலங்கை கடற்படை கப்பல் தக்ஷின நிருவனத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய அவசர சிகிச்சை பிரிவு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட வைத்தியசாலை தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவின் தலைமையில் 2024 ஜூன் 03 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
04 Jun 2024
இலங்கை கடற்படைக்கும் அமெரிக்காவின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான முதலாவது சந்திப்பு கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது
இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்காவின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகமுடன் (National Nuclear Security Administration of United State of America) 2024 பெப்ரவரி 28 ஆம் திகதி இலங்கையின் எல்லைகளில் சிறப்பு அணுசக்தி பொருட்கள் மற்றும் பிற கதிரியக்க பொருட்களை சட்டவிரோதமாக கொண்டு செல்வது, ஆட்கடத்தலைக் கண்டறிதல் மற்றும் கைது செய்வதற்கான இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக தொழில்நுட்ப மற்றும் வழிமுறைகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று எட்டப்பட்டது இதன் அடிப்படை நோக்கம் குறித்து விவாதிப்பதற்கான இரண்டு நாள் கூட்டம் 2024 ஜூன் 03, ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் தொடங்கியது.
04 Jun 2024


