கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் உள்ள பொதுமக்களின் சுத்தமான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் ஆரம்பிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவும் திட்டத்தின் கீழ், கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் மற்றும் தேசிய லொத்தர் சபையின் நிதி பங்களிப்புடன், கல்கமுவ, பாலுகடவல ஸ்ரீ சுமண வித்தியாலயத்தில் நிறுவப்பட்ட 1,000 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் தேசிய லொத்தர் சபையின் தலைவர் கலாநிதி சமீர சி.யாப்பா அபேவர்தன ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று (2024 ஜூன் 05) பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.