நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை நீரியல் சேவை உலக நீரியல் தினத்தை கொண்டாடுகிறது

ஜூன் 21ஆம் திகதி ஈடுபட்டுள்ள உலக நீரியல் தினத்துடன் இணைந்து, இலங்கை கடற்படை நீரியல் சேவையால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக நீரியல் தின கொண்டாட்டம் நிகழ்வு இன்று (2024 ஜூன் 28,) கடற்படை நீரியல் பிரதானி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோரின் அழைப்பின் பேரில். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் தலைமையில் வெலிசர Wave n’ Lake நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது.

28 Jun 2024

இந்திய மீன்பிடிப் படகொன்றை கைது செய்யும் நடவடிக்கையின் போது உயிரிழந்தகடற்படை வீரர் பீ.டீ.பீ ரத்நாயக்கவின் இறுதிக் கிரியைகள் இலங்கை கடற்படையின் பூரண மரியாதையுடன் நடைபெற்றது

2024 ஜூன் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகொன்றை கைது செய்யும் நடவடிக்கையின் போது உயிரிழந்த கடற்டை வீரர் பீ.டீ.பீ ரத்நாயக்கவின் இறுதிச் சடங்கு 2024 ஜூன் 27 ஆம் திகதி இலங்கை கடற்படையின் பூரண மரியாதையுடன் இப்பாகமுவ ஹிபவ்வ பொது மயானத்தில் நடைபெற்றதுடன், குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

28 Jun 2024

தெல்கொட தெமாகலகம மஹமெவ்னாவ பௌத்த கல்லூரியின் உத்தியோகபூர்வ பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வு கடற்படை தளபதி தலைமையில் இடம்பெற்றது

தெல்கொட, தெமாலகம மஹமெவ்னாவ பௌத்த கல்லூரியின் மாணவர் தலைவர் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு 2024 ஜூன் 27 அன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் குறித்த கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

28 Jun 2024