நிகழ்வு-செய்தி
கடற்படை நடவடிக்கைகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய கடற்படை அதிகாரிகளுக்கு பிரிட்டிஷ் கடற்படை நிறுவனத்திடமிருந்து சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன
பிரித்தானிய கடற்படை நிறுவனத்தின் (The Nautical Institute) இலங்கைக் கிளையினால் இலங்கை கடற்படையின் கடற்படைக் கல்விப் பாடநெறிகள் மற்றும் வணிகக் கடல்சார் கற்கைநெறிகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில், 2024 ஜூன் 29 ஆம் திகதி வெலிசர 'வேவ் என்' லேக்' நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது.
01 Jul 2024
இரண்டாம் உலகப் போரின் போது கிழக்குக் கடலில் மூழ்கிய ‘HMS Hermes’ என்ற விமானம் தாங்கி கப்பலில் கடற்படை ஒரு ஆய்வு சுழியோடி பயிற்சியொன்றை நடத்தியது
இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் விமான தாக்குதல் காரணத்தினால் மட்டக்களப்புக்கு அப்பால் கிழக்கு கடலில் மூழ்கிய அரச கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘HMS Hermes’கப்பலில் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடல் பகுதியில் சிறப்பு ஆய்வு சுழியோடி பயிற்சியொன்று கடற்படை சுழியோடி பிரிவால் 2024 ஜூன் 30 ஆம் திகதி வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன் இந் நிகழ்வில் கழந்துகொண்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா (ஓய்வு) ஆகியோர் ‘HMS Hermes’ கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் பணியாளர்களை நினைவு கூறும் வகையில் பொப்பி மலர்க்கொத்துகளை வைத்தனர்.
01 Jul 2024


