திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் ஆறாவது கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய லெப்டினன்ட் கமாண்டர் (பயிற்றுவிப்பாளர்) சோமசிறி தேவேந்திர (ஓய்வு பெற்ற) அவர்களுக்கு பாராட்டு விழா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் இன்று (2024 செப்டம்பர் 08), கடற்படை மற்றும் கடல்சார் அகடமியில், அட்மிரல் வசந்த கர்ணாகொட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.