நிகழ்வு-செய்தி

இலங்கை அரச கடற்படையின் காலத்தில் திருகோணமலையில் கடமையாற்றிய பிரித்தானிய அரச கடற்படை அதிகாரியின் அஸ்தி திருகோணமலை கடலில் கடற்படை மரியாதையுடன் கலைக்கப்பட்டது

1956/1958 காலப்பகுதியில், உலகின் இரண்டாவது பெரிய கடற்படைத் தளமாகக் கருதப்பட்ட திருகோணமலையில் நிறுவப்பட்ட HMS Highflyer கடற்படைத் தளத்தின் துறைமுக சமிக்ஞை அதிகாரியாக பணியாற்றிய, 1999 இல் காலமான லெப்டினன்ட் Norman Schofield மற்றும் அவரது மனைவி Marian Schofield ஆகியோரின் அஸ்தி, அதிகாரியின் இறுதி விருப்பத்தின்படி, திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் Ostenburg முனைக்கு அருகில் உள்ள கடலில் கடற்படைப் பாரம்பரியம் மற்றும் மரியாதையுடன் கலைக்கும் நிகழ்வு குறித்த அதிகாரியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் Darren Woods ஆகியோரின் பங்கேற்புடன் 2024 செப்டெம்பர் 27 ஆம் திகதி காலை நடைபெற்றது.

28 Sep 2024