நிகழ்வு-செய்தி
வடக்கு கடற்படை கட்டளையின் புதிய கட்டளைத் தளபதியாக ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க பொறுப்பேற்றுக் கொண்டார்
வடக்கு கடற்படை கட்டளையின் புதிய கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இன்று (2024 நவம்பர் 03) வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
03 Nov 2024
இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுரம் புனித பூமியில் கஞ்சுக பூஜை மற்றும் கொடி ஆசீர்வாத நிகழ்வுகள் நடைபெற்றது
2024 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 74 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கஞ்சுக பூஜை மற்றும் கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் பூஜை இம்முறையும் கடற்படை பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிகழ்வு 2024 நவம்பர் 02 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் ருவன்வேலி மஹா சேய மற்றும் ஜெய ஸ்ரீ மகா போதி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி மாலா லமாஹேவாவும் கலந்து கொண்டார்.
03 Nov 2024


