உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2024 நவம்பர் 10 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Vela’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று (2024 நவம்பர் 10) இலங்கையை விட்டு புறப்பட்டுள்ளதுடன், இலங்கை கடற்படையினர் குறித்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தில் வைத்து கடற்படையின் பாரம்பரிய முறைப்படி பிரியாவிடை வழங்கினர்.