நிகழ்வு-செய்தி

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் மூலம் பொலன்னறுவை மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டது

சுகாதார அமைச்சின் முயற்சியால், அவுட்ரேவ் ப்ராஜெக்ட்ஸ் கியாரண்டி லிமிடெட் நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில், கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின், சமூகப் பணி செயல்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட 1074 மற்றும் 1075 வது இரண்டு (02), (RO) Plants நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவும் சிறப்புத் திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தின் இரண்டு (02) இடங்களான அலஹெர பிரதேச செயலாளர் பிரிவில், யாய 06, மேல் பகுதி, பெதுமெல கிராமத்திலும், கல்முல்ல, மல்வவாய, பகமூனையிலும் 2024 டிசம்பர் 31 அன்று நிறுவப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

31 Dec 2024

புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சந்தித்தார்

இலங்கை கடற்படையின் 26வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட இன்று (2024 டிசம்பர் 31) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டாவை (ஓய்வு பெற்ற) பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.

31 Dec 2024

அட்மிரல் பிரியந்த பெரேரா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

இலங்கை கடற்படையின் 25 ஆவது கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய அட்மிரல் பிரியந்த பெரேரா, தனது 37 வருட சேவையை நிறைவு செய்து இன்றுடன் (2024 31 டிசம்பர்) ஓய்வு பெற்றார்.

31 Dec 2024

இலங்கை கடற்படையின் 26வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட

இலங்கை கடற்படையின் 26வது கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவை இன்று (2024 டிசம்பர் 31) இராணுவத் தளபதியும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவருமான திரு. அனுரகுமார திசாநாயக அவர்கள் நியமித்த்தன் பின்னர், அவர் வைஸ் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அதன்படி, இன்று (2024 டிசம்பர் 31) முற்பகல், கடற்படைத் தலைமையகத்தின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் கடற்படைத் தளபதியின் வாளை கடற்படைத் தளபதிக்கு வழங்கி, கடற்படைத் தலைமையகத்தில் புதிய கடற்படைத் தளபதியிடம் கடமைகளை ஒப்படைத்த்துடன், கடற்படைத் தலைமையகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி நடைப்பெற்ற விசேட நிகழ்வின் மூலம் புதிய கடற்படைத் தளபதிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

31 Dec 2024