கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட அவர்கள் இலங்கை கடற்படையின் 26 ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றதன் பின்னர், 2025 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி அனுராதபுரம் அட்டமஸ்தானம் உள்ளிட்ட புனிதத் தலங்களுக்குச் சென்று கடற்படையின் எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் இதற்கான கடற்படைச் சேவைகளுக்கு ஆசிகளைப் பெற்றுக் கொண்டதுடன், இந்நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி அனுஷா பானகொட அவர்களும் பங்குபற்றினார்