நிகழ்வு-செய்தி

கடற்படையினரின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் அனுராதபுரம் பரசங்கஸ்வெவ பகுதியில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், சிரச GAMMADDA சமூகப்பணி திட்டத்தின் அனுசரணையில், அநுராதபுரம் மாவட்டத்தின் மத்திய நுவரகம மாகாண பிராந்திய செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பரசங்கஸ்வெவ நிக்ரோதாராம விகாரையில் நிறுவப்பட்ட 1080வது நுண்ணுயிர் எதிர்ப்பு நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (2025 பெப்ரவரி 16) மக்களிடம் கையளிக்கப்பட்டது.

16 Feb 2025

"சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற திட்டத்தின் கீழ் கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை சுத்தம் செய்வதில் கடற்படையின் பங்களிப்பு

க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தீவைச் சூழவுள்ள கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை சுத்தம் செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற திட்டத்துடன் இணைந்து 2025 பெப்ரவரி 15 ஆம் திகதி மற்றும் இன்று (2025 பெப்ரவரி 16) மேற்கு, தென் கிழக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்ட கடற்கரை சுற்றுலாத் தலங்களை சுத்தம் செய்தல் போன்ற திட்டங்களுக்கு கடற்படை முழுமையான பங்களிப்பை வழங்கியது.

16 Feb 2025

இந்தோனேசியக் கடற்படைக் கப்பல் 'KRI BUNG TOMO - 357' நட்புரீதியான விஜயத்திற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான 'KRI BUNG TOMO - 357' என்ற போர்க்கப்பல் இன்று (2025 பெப்ரவரி 16) கொழும்பு துறைமுகத்திற்கு சிநேகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றனர்.

16 Feb 2025