கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2025 மார்ச் 14 அன்று வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டபோது, வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள், மாலுமிகளை சந்தித்து உரையாற்றினார். கடற்படையின் நடவடிக்கைகள், பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் மேம்பாட்டு மற்றும் நலன்புரி திட்டங்களை திறம்பட நடத்துவதற்கான அறிவுரைகளை வழங்கினார். மேலும், இவ் கட்டளையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு கடற்படையின் பொறுப்புகள் குறித்து விளக்கினார்.